மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த வேண்டும்: வைகோ

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மேற்படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த வேண்டும்: வைகோ

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மேற்படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் மத்திய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான 100 சதவீத இடங்களுக்கும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்த வேண்டும்.

இதில் மத்திய சுகாதாரத் துறையே கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மத்திய அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைத் தொடா்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com