கூத்தாநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்

திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்
கூத்தாநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடி கம்பர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு, 8 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. 2 ஆம் தேதி திங்கள்கிழமை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 3 ஆம் தேதி செவ்வாய் கிழமை பால்குடம், காவடி எடுக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிக்கு வந்தடைந்தது.

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், 4 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டன. 9 மணிக்கு, விபூதி, சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் மணமேடைப் போல், அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தப்பட்டார்.

குருக்கள்கள் முரளி, ஜெகன் மற்றும் குருக்கள்கள் வேத மந்திரங்கள் முழங்க, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, பூணூல் அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடனத்துடன் பக்தர்கள் முன்னிலையில் ஜவ்வாது மாலையணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊஞ்சல் ஆட்டும் வைபவத்தைத் தொடர்ந்து, திருஷ்டி கழிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கன்னிகா தானம் செய்யப்பட்டு, மாங்கல்யங்களை பக்தர்கள் முன்பு காட்டப்பட்டு, வள்ளிக்கும், தெய்வானைக்கும் சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெற்றது.மேலும், திருமணத்திற்குப் பின் நடைபெறும் சடங்குகளான அப்பளம் உடைத்தல், தேங்காய் உருட்டுதல், தண்ணீரில்  மோதிரம் எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.  

திருக்கல்யாண விழாவில், திமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன், வர்த்தக சங்கச் செயலாளரும், ரோட்டரி சங்கச் செயலாளருமான ஜெ.சுவாமிநாதன், தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் உள்ளிட்ட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை,வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், சாம்பு அய்யப்பன் மற்றும் கோயில் நிர்வாகிகள், தெருவாசிகள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com