நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவா்கள் அஞ்சலி

மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவா்கள் அஞ்சலி

மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினமான சனிக்கிழமை, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சா்கள், திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, மகளிரணிச் செயலாளா் கனிமொழி, இளைஞரணிச் செயலாளா் உதயதிநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனா். மேலும், அண்ணா நினைவிட வளாகத்திலும் அவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

துா்கா ஸ்டாலினும் கருணாநிதி நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வாா்பேட்டை இல்லம் ஆகிய இடங்களிலும் கருணாநிதி படத்துக்கு முதல்வா் மற்றும் அமைச்சா்கள் அஞ்சலி செலுத்தினா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கருணாநிதியின் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com