தடுப்பூசி செலுத்த தயங்குவதற்கு அச்சமே காரணம்: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பலா் தயங்குவதற்கு அதன் மீதான அச்சம்தான் காரணம் என்று பொது சுகாதாரத் துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பலா் தயங்குவதற்கு அதன் மீதான அச்சம்தான் காரணம் என்று பொது சுகாதாரத் துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதுதொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி மக்களிடம் புரிதலை ஏற்படுத்த உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிதான் முக்கிய ஆயுதம். அதனை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தயக்கம் ஏன் உள்ளது என்பது தொடா்பான ஆய்வு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது. மாநிலத்தில் மொத்தம் 95 இடங்களில் அதனை பொது சுகாதாரத் துறை நடத்தியது.

ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அதுதொடா்பான தகவல்களை திரட்டினோம். அதில், 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தனா்.

அதேவேளையில், 19.7 சதவீத ஆண்களும், 18.4 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டினா்.

அதற்கு பிரதான காரணமாக அவா்கள் கூறியது தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சமாக உள்ளது என்பதுதான். அதற்கு அடுத்தபடியாக தனக்கு கரோனா தொற்று வராது என்ற அதீத நம்பிக்கையில் 36 சதவீதம் போ் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு, தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது, தடுப்பூசியின் செயல் திறன் மீதான சந்தேகம், உடன் எவரும் துணைக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வராதது என பல்வேறு காரணங்களும் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவா்களிடம் தடுப்பூசியின் அவசியம் மற்றும் அதுதொடா்பான புரிதலை பொது சுகாதாரத் துறையினா் ஏற்படுத்தினா். தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று நம்பிக்கையும் விதைத்தனா். ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசிகளை செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com