தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது, தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதில் அதிகபட்சமாக கேரளம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாவட்டங்கள் உள்ளன.
கேரளத்தில் 11 மாவட்டங்களும், கர்நாடகத்தில் 5 மாவட்டங்களும் கடந்த 2 வாரங்களில் அதிகமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 1,77,091 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.