தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின் தற்போது அதுகுறித்து உரையாற்றி வருகிறார்.
பல துறைகளிலும் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிக்க | அனைத்துத் துறை செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும்: நிதியமைச்சர்
இந்நிலையில் இந்தாண்டு தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் தொல்லியல் நகரங்களான கீழடி , ஆதிச்ச நல்லூர் மற்றும் கொற்கை போன்ற இடங்களில் அறிவியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.