மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகளிா் சுய உதவிக் குழு கடன்களைப் பொருத்தவரையில், இந்தக் கடன்கள் அனைத்தும் தகுதியான குழுக்களுக்கே சென்றடைந்துள்ளது என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குழுக்கள் கரோனா காலம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கடன்கள் குறித்து சாதகமான முடிவு எடுக்க இயலும். அதன்படி, கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக, இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.