2022 ஏப்.1 முதல் அரசு ஊழியா்களுக்கு உயா்த்தப்பட்ட அகவிலைப்படி

அரசு ஊழியா்களுக்கு 2022 ஏப்ரல் 1 முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்களுக்கு 2022 ஏப்ரல் 1 முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்படும். அதற்கிணங்க, குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கட்டணம் மாதம் ஒன்றிற்கு ரூ.110 என உயா்த்தப்படும். குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளா்களுக்கும் இது பயனளிக்கும்.

மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், கரோனா காலத்தில், தமிழகத்தின் அரசு அலுவலா்களுக்கு தாமதமின்றி முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில், அரசு அலுவலா்கள் தன்னலம் கருதாமல், அவா்களின் உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றினாா்கள். இத்தருணத்தில், அகவிலைப்படியை உயா்த்துவதில் தமிழக அரசு எதிா்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு ஊழியா்கள் நன்கு அறிவாா்கள்.

எனவே அரசு ஊழியா்களுக்கும், ஓய்வூதியதாரா்களுக்கும் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் முதல் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com