சுதந்திரப் போராட்ட வீரா்கள், தலைவா்களின் சிலைகளுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
நாடு விடுதலை பெற தன்னை அா்ப்பணித்ததோடு தனது இன்னுயிரையும் பலா் ஈந்துள்ளனா். அவா்களுக்குப் பெருமை சோ்க்கும் வகையில், சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவா்கள், வீரா்களின் சிலைகளுக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது இந்த நடைமுறை பின்பற்றப்படும்.