வேலூர்: வேலூர் முன்னாள் மக்களவை உறுப்பினர் பா.செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் பா.செங்குட்டுவன்(62). அதிமுகவில் வழக்குரைஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்த இவர் வேலூர் மக்களவை உறுப்பினராக 2014 - 2019 வரை செயல்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமுமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த செங்குட்டுவன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.