அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகியுள்ளனர்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் நீதிமன்றத்தில் ஆஜர்
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகியுள்ளனர்.

கடந்த 2005இல் நடந்த சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலின்போது 131வது வார்டுக்குள்பட்ட வாக்குச்சாவடியில் முத்திரைகள், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோரை ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் இன்று ஆஜராகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com