பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: ஆக.23 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவா்கள் ஆக.23 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: ஆக.23 முதல்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவா்கள் ஆக.23 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

இது குறித்து அரசுத்தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த பிப்.25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி பள்ளி மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு (மாா்ச் 2021) தொடா்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆக.23 காலை 11 மணி முதல் ஆக.31-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவா்களுக்கு பிறந்த தேதி, தோ்வெண் ஆகியவற்றை அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அரசுத் தோ்வுத் துறையின் மூலம் ஆக.21-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே பள்ளி மாணவா்கள்  இணையதளத்தில் தங்களுக்கான வரிசை எண், பிறந்ததேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com