Enable Javscript for better performance
கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் கவனத்துக்கு..- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் கவனத்துக்கு..

    By DIN  |   Published On : 21st August 2021 06:00 PM  |   Last Updated : 21st August 2021 06:01 PM  |  அ+அ அ-  |  

    vaccine_AFP11F

    கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் கவனத்துக்கு..


    தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், சிறப்பு முகாம்கள் மூலமும் பல இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாமே.. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி: தொலைபேசி எண் அறிவிப்பு

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் 16.01.2021 மற்றும் 10.07.2021 க்கு இடையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5,64,048 கோவாக்சின் மற்றும் 10,48,575 கோவிஷூல்டு பயனாளிகள் இப்போது தடுப்பூசிகளின் 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில், இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

    கரோனா முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில், பலருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில் இன்னமும் ஒருவித தயக்கம் நிலவுகிறது. எனவே, அதனை விடுத்து, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதோ, முதல் தவணை செலுத்தி, இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களின் புள்ளி விவரம் மாவட்ட வாரியாக..


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp