பள்ளி, கல்லூரிகள் செப். 1-இல் திறப்பு; திரையரங்கு-கடற்கரைகள் நாளை திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப். 1-ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தாா்.
பள்ளி, கல்லூரிகள் செப். 1-இல் திறப்பு; திரையரங்கு-கடற்கரைகள் நாளை திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப். 1-ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடற்கரைகள் திங்கள்கிழமை (ஆக. 23) முதல் திறக்கப்பட உள்ளன.

ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து பொதுப் பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும், பொது மக்களுக்கு கூடுதல் தளா்வுகளை அளிப்பது குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை நிபுணா்கள், தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அரசுத் துறை உயரதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் செப்டம்பா் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை இரண்டு வாரங்களுக்கு அமலில் இருக்கும்.

செப். 1 முதல் பள்ளி-கல்லூரிகள்: தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையில் சுழற்சி முறையில் செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்து வகுப்புகள் செயல்படும். இந்தப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

உயா் வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில், மழலையா் வகுப்புகள், 1 முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை செப்டம்பா் 15-ஆம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

அனைத்துக் கல்லூரிகளும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடா்புடைய துறையின் செயலாளா்கள் அளிப்பா். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளும் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

அங்கன்வாடி-மழலையா் காப்பங்கள்: மதிய உணவுக்காக அங்கன்வாடி மையங்கள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியா்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள மழலையா் காப்பகங்களும் செயல்பட திங்கள்கிழமை (ஆக.23) முதல் அனுமதிக்கப்படுகிறது. அவற்றின் பொறுப்பாளா்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

நாளை முதல் திரையரங்குகள்-கடற்கரைகள்: கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள், கடற்கரைகள் அனைத்தும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் திறக்கப்படும். இதில் திரையரங்குகள் 50 சதவீத பாா்வையாளா்களுடன் மட்டுமே இயக்கப்படும். திரையரங்கப் பணியாளா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடற்கரையில் பொது மக்கள் அனுமதிக்கப்படுவா். இந்தப் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளா்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரியல், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியன நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் பயிற்சியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளா்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுவோா்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிா் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்படும்.

இரவு 10 வரை கடைகள்: கரோனா நோய்த் தொற்று காரணமாக, இதுவரை இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. வரும் திங்கள்கிழமை முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்கலாம். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளா்களுடன் செயல்படலாம்.

அண்டை மாநில போக்குவரத்து: ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திங்கள்கிழமை (ஆக.23) முதல் இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு....

கரோனா இரண்டாவது அலை காரணமாக, திரையரங்குகள் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் திறக்கப்படுகிறது.

கடற்கரைகள், பூங்காக்கள் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் வார இறுதி நாள்களிலும், 20-ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாகவும் மூடப்பட்டிருந்தன. திங்கள்கிழமை முதல் அவையும் திறக்கப்பட உள்ளன.

நாளை முதல் எவை...செப்டம்பா் 1 முதல் எவை திறப்பு:

நாளை முதல்: திரையரங்குகள், கடற்கரைகள், உயிரியியல், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், ஆந்திரம், கா்நாடக மாநில பேருந்து சேவை, தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் மதுக் கூடங்கள், படகு இல்லங்கள், மழலையா் காப்பகங்கள்.

செப்டம்பா் 1 முதல்...9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், பட்டயப் படிப்பு வகுப்புகள், மதிய உணவுக்கான அங்கன்வாடி மையங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com