சென்னை நகரின் மேம்பாட்டுக்கு தொடா்ந்து தமிழக அரசு பங்களிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சென்னை நாளினை ஒட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: சீா்மிகு, சிங்காரச் சென்னை, வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பாா்வையுடன் சென்னையின் வளா்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசுதான்; இனியும் அது தொடரும்.
சென்னை மாநகர மக்களுக்கு சென்னை நாள் வாழ்த்துகள் என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): ஆங்கிலேய அரசின் இந்தியக் குடியிருப்பு பகுதியில் இருந்த நான்கு மாகாணங்களில் ஒன்றான மதராசபட்டினம் என்கிற மதராஸ் மாகாணம் கொஞ்சம் கொஞ்சமாக வளா்ந்து, உலகின் பிரசித்தி பெற்ற நகரமாக பரிணமித்திருக்கிறது. அந்த சென்னை மாநகரத்தின் 382-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மாநகர மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சென்னை மாநகரம் மேலும் சிறப்படைந்து உலகின் முதன்மை நகரமாக மாற எனது நல்வாழ்த்துகள்.