தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 172 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 143 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும், செங்கல்பட்டில் 94 பேரும், சேலத்தில் 80 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை போன்று கோவையிலும் தஞ்சாவூரிலும் 4 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக அரியலூர், திருப்பூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர்.