தாம்பரம் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி ஆக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேற்கண்ட பகுதிகளை சுற்றியுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஒன்றிணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.