ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் ரயில்வே காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசிகள் போட வேண்டும் என வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட ரயில் பயணிகளுக்கு முககவசம், கிருமிநாசினி மற்றும் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் சரவணன்முருகன், தனிப்பிரிவு காவலர் பொன்குமார் உள்ளிட்ட காவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்.