திமுக மக்களவை உறுப்பினா் கௌதம் சிகாமணி, முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடியின் மகனான டாக்டா் கௌதம் சிகாமணி, கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளாா்.
இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு, அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். அவா்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.