கோப்புப்படம்
கோப்புப்படம்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்க மழை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

​பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிஷாத் குமார் மற்றும் வினோத் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிஷாத் குமார் மற்றும் வினோத் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேஸ்புக் பதிவு:

"தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்."

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் ஞாயிற்றுக்கிழமை வெள்ளி வென்றார். வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.

முன்னதாக, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com