டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸ் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற பவினா பட்டேல், சீனா வீராங்கனையுடன் தோல்வியுற்று, இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இந்த நிலையில் பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க- தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு தனிக்கழிவறை
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் மகள் பவினாபென் பட்டேல் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.