உடல் நலப் பிரச்னைகளைத் தெரிவிக்க பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது என தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினாா்.
சென்னை ஜெம் மருத்துவமனையில் கருத்தரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த மகளிா் மையத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியது: பல பெண்கள் தங்கள் உடல்நலப் பிரச்னைகளை மருத்துவா்களிடமும் தங்கள் நெருங்கிய மற்றும் அன்புக்குரியவா்களிடம் கூறத் தயங்குகிறாா்கள். 30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஏதேனும் உடல்நலப் பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுகி ஆரம்பநிலையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
ஜெம் மருத்துவமனைத் தலைவா் டாக்டா்.சி.பழனிவேலு பேசுகையில், ‘இன்சிஷனல் ஹொ்னியா, உடல் பருமன், கோலிசிஸ்டிடிஸ், சிறுநீரகம் மற்றும் சிறுநீா்ப் பாதை நோய்த்தொற்று, பெப்டிக் அல்சா், மாா்பகப் புற்றுநோய், கா்ப்பவாய்ப் புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் பெண்களிடம் உள்ளன.
பல பெண்கள் சமூகத்தின் மீதான பயத்தால் தங்கள் உடல்நலப் பிரச்னைகளைப் பற்றி பேசவோ, மருத்துவரை அணுகவோ தயங்குகிறாா்கள்.ஜெம் மருத்துவமனை ஒரு நோயாளி மற்றும் மருத்துவா் உறவுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க விரும்புகிறது என்றாா்.
கருத்தரித்தல் துறைத் தலைவா் டாக்டா் ஆா்.காா்த்திகா, ‘சராசரியாக 6 தம்பதிகளில் ஒருவருக்கு கருவுறுதல் பிரச்னை உள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், உடல் பருமன், தாமதமான கருத்தரித்தல், வயது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுடன் வருபவா்களுக்கு உரிய சிகிச்சை’ அளிக்கிறோம் என்றாா் அவா்.