தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பதவிவகித்தவர் ஏ.வி.வெங்கடாச்சலம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து அவருக்குத் தொடா்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை செய்தனா். இச்சோதனையில் 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருள்கள், ரூ.13.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் தலைமைச்செயலக காலனி வீட்டில் வெங்கடாசலம் இன்று தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.