அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவா் தினத்தன்று அம்பேத்கா் விருது வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்காக இணைத்துக் கொண்ட ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகவும், இதற்கான விண்ணப்பங்கள், கூடுதல் தகவல்களை அரசு இணையதளத்தின் வழியே அறிந்து கொள்ளலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தை, ஆதிதிராவிடா் நல ஆணையா் அலுவலகம், சென்னை - 5 என்ற முகவரிக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.