இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னையில் போர் வீரர்களின் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். கடற்படை வீரர்களின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, டிசம்பா் 4-ஆம் தேதி கராச்சியில் உள்ள துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படையை இந்திய கடற்படை தோற்கடித்தது.
பாகிஸ்தானின் போர்கப்பல்களை இந்திய கடற்படை தாக்கி அளித்தது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று கடற்படை தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடற்படை வீரர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நமது கடற்படையின் வீரதீரச் செயல்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது என்றார் .
இதையடுத்து, சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அடையாறில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்தில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.