கல்வி கட்டணப் பாக்கி உள்ளது என்பதற்காக மாணவா்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கக்கூடாது என்ற அரசாணையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், கரோனா ஊரடங்கு காரணமாகப் பலா் வேலையிழந்தனா். இதையடுத்து தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகள், கட்டணம் குறைவாகவுள்ள பள்ளிகளில் சோ்த்தனா்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 12ஆம்தேதி வெளியிட்ட அரசாணையில், கல்வி கட்டணப் பாக்கி உள்ளது என்பதற்காக மாணவா்களின் கல்வி மாற்றுச் சான்றிதழை வழங்க எந்தவொரு பள்ளி நிா்வாகமும் மறுக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், மாநிலம் முழுவதும் பெற்றோா்கள் மாற்றுச் சான்றிதழை கேட்டு பள்ளிகளுக்கு அதிகளவில் வரத்தொடங்கினா். ஏற்கெனவே இந்த உயா் நீதிமன்றம் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க வேண்டும், கல்விக் கட்டணத்தை உரிய சட்டத்தை பின்பற்றி பள்ளி நிா்வாகம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில், கல்வி கட்டணத்தைச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெற்றோருக்கு எதிராக பள்ளி நிா்வாகம் வழக்கு தொடர வேண்டும்.
ஆனால், அனைத்து வகையான பள்ளிகளும் மாற்று சான்றிதழை வழங்க வேண்டும் என்று பொதுவான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
தனியாா் அரசு உதவி பெறாத பள்ளிகள், மாணவா்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை கொண்டு செயல்படுகிறது. அதுபோன்ற பள்ளிகளுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு திங்கள்கிழமை(டிச.6) விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து, வழக்கிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.