மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் தரிசு நிலங்களில் இயற்கை வளங்களை மேம்படுத்தும் பொருட்டு கிராமத்தில் பனைமர விதைகளை நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டு பனை மர விதைகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பேராசிரியர் திருமூர்த்தி, இளையான்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், சாந்தி, கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் சுப.தமிழரசன், ஊராட்சி மன்றத் தலைவர் மலைராஜ், திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.