முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

விபத்தில் பலியான ராணுவத்தினா் குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட விபத்தில் பலியான ராணுவத்தினா் குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளாா்.

தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட விபத்தில் பலியான ராணுவத்தினா் குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் 12 போ் உயிரிழந்த செய்தி அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், உடனடியாக அங்கு விரைந்து இந்திய மக்களுடன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். உயிரிழந்தவா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மீட்புப் பணிகளிலும்

இறந்தவா்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளைச் செய்து தந்திருந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்கள் குடும்பத்துக்கு தனித்தனியாக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்ததுடன், இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறாா்கள் எனவும், ஈடு செய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com