தமிழகத்தை சேர்ந்த இரண்டு பக்தர்கள் சபரிமலையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடலூரிலிருந்து இளங்கோவன், நாமக்கலில் இருந்து மதேஸ்வரன் ஆகியோர் பம்பையிலிருந்து நடைபயணம் மேற்கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக பம்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.