ரஷ்யா அருகே உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சாம்பியன்ஷிஷ் போட்டிகளில், பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்ட புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் சாம்பியன்ஷிஷ் போட்டிகளில், பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா.
தஞ்சாவூர் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் இவர், புதுக்கோட்டை அருகே உள்ள நெம்மேலிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற தஞ்சாவூர் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அனுராதா.
விரைவில் ஊர் திரும்ப உள்ள அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.