பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தற்போது ஆண்களின் திருமண வயது 21-ஆகவும் பெண்களின் திருமண வயது 18-ஆகவும் உள்ளது. பெண்களின் திருமண வயதை உயா்த்துவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். இதுதொடா்பாக ஆய்வு செய்வதற்கு சமதா கட்சியின் முன்னாள் தலைவா் ஜெயா ஜேட்லி தலைமையில் 4 போ் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, ஆண்களின் திருமண வயதுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக, சிறாா் திருமணச் சட்டம்-2006-இல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்யின் ட்விட்டர் பதிவில், பெண்களின் திருமண வயதை "21ஆக " உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.