திருநெல்வேலி பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்தது குறித்து அறிக்கை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | நெல்லையில் பள்ளிச் சுவர் இடிந்து விபத்து: 3 மாணவர்கள் பலி
இந்நிலையில், பள்ளியில் சுவர் இடிந்து விழுந்தது குறித்தும் மாணவர்கள் பலியானது குறித்தும் திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.