மானாமதுரை: தமிழ்நாடு சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தமிழ்நாடு ஸ்போர்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் மானாமதுரை நாகர்ஜூன் ஷிட்டோ ரியோ ஸ்போர்ஸ் கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு நிலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிக்கு மானாமதுரை கராத்தே வீரர்களான கீழ்க்கண்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாக போட்டி குழுவினரால் அறிவிக்கப்பட்டது.
போட்டிக்கு தேர்வான வீரர்கள் பெயர் விபரம்:
எம்.அஸ்விகா,
பி. ரதீபா
ஏ. பிரியதர்ஷினி
எம். மாதேஷ்
எம். திக்சன்
எம். அருண்பாண்டியன்
எஸ். ஹேம்நாத்
ஆர். கபினேஸ்
கே.பிரவின் சஞ்சய்
எஸ். யோகித்
எம். ஹரிபிரசாத்
ஆர். கபிலேஸ்
பிஎம். விக்னேஷ்வரன்
ஜே.தருண்
கே. நித்திஸ்குமார்
த. சிவராமகிருஷ்ணன்
போட்டியில் வென்று தேர்வான இந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவர் ஷீகான் டி. ஈஸ்வரகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.பரிசு வழங்கும் நிகழ்வில்
மானாமதுரை நாகர்ஜூன் ஷிட்டோ ரியோ ஸ்போர்ஸ் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் சிவா.நாகர்ஜூன், உதவி பயிற்சியாளர் உமா நாகர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.