தனியார் தேங்காய் நார் மில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 
காட்டுப்புத்தூர் அருகே விபத்துக்குள்ளான தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன்.
காட்டுப்புத்தூர் அருகே விபத்துக்குள்ளான தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன்.

முசிறி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் மில் இயங்கி வருகிறது.

இந்த மில்லில் தொட்டியம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பேருந்தில் அழைத்து சென்று பணி முடிந்தவுடன் திரும்ப கொண்டுவந்து விடுவது வழக்கம். இவ்வாறு பணிக்கு சென்றுவிட்டு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து காடுவெட்டி அருகே ஓட்டுநர் சதீஷ்குமார் ( 38) என்பவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பணிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கூன் ராக்கம்பட்டி சேர்ந்த  புவனேஸ்வரி, தொட்டியபட்டி சேர்ந்தவர்களான சந்திரா,சரசு, சத்யா, மஞ்சுளா, பெரும்மாமா, கங்கா, காசி ஆகிய 8 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், சந்திரா, சரசு மஞ்சுளா, பெரும்மாமா ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com