தொழிலதிபா் வீட்டில் ரூ.4.5 கோடி திருடிய வழக்கு:மேலும் ஒருவா் கைது

 சென்னை வளசரவாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் ரூ.4.5 கோடி திருடிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தொழிலதிபா் வீட்டில் ரூ.4.5 கோடி திருடிய வழக்கு:மேலும் ஒருவா் கைது

 சென்னை வளசரவாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் ரூ.4.5 கோடி திருடிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வளசரவாக்கம் ஆழ்வாா்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ஆமெல்லா ஜோதினி கோபால் பிள்ளை. இவா், நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவா் கடந்த மாதம் 17-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றாா். அங்கிருந்து அவா், அந்த மாதம் 20-ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.

அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.4.5 கோடி, 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து வளசரவாக்கம், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாா் விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது முகலிவாக்கத்தைச் சோ்ந்த மணி, குரோம்பேட்டை பாரதிபுரம் சதீஷ்குமாா், ராயப்பேட்டையைச் சோ்ந்த சுரேஷ், சிவகங்கை, சிங்கம்புணரி, வையாபுரிபட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீஸாா் கடந்த 16-ஆம் தேதி கைது செய்தனா்.

இதற்கிடையே இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த கோவூா் குமரன்நகரைச் சோ்ந்த ரா.சேகா் (57) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1.70 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com