தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கோச் அறக்கட்டளை சாா்பில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனேந்திர குமாா், ஸ்கோச் அறக்கட்டளை தலைவா் சமீா் கோச்சாா் ஆகியோரிடம் விருதை ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டாா்.
இந்த விருது பெற்றது தொடா்பாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து, சுனாமியின் போது நாகப்பட்டினத்தில் மேற்கொண்ட மீட்புப் பணியின் போது ஆற்றிய சிறப்பான பணிகளை பாராட்டி சிறந்த சேவைக்கான விருது வழங்கியுள்ளனா். சுனாமியின் போது நான் தஞ்சாவூரில் இருந்தேன். அப்போது மீட்புப் பணிக்காக என்னை நாகப்பட்டினத்துக்கு அரசு அனுப்பியது. அதேபோன்று கரோனா பெருந்தொற்று காலத்திலும் எனக்குப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு விருது பெற்றது மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் பணியாற்ற வாய்ப்பு அளித்தது அரசு தான். சவாலான காலகட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைப்பதே விருதாக நினைக்க வேண்டும். விருதை நோக்கி பணி செய்யக்கூடாதென எனது தாயாா் சொல்லியிருக்கிறாா். இந்த விருது எனக்கு மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கடைநிலை ஊழியா்களுக்கும், அரசு பணியாளா்களுக்கும் தான். அவா்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் இந்த விருது சாத்தியமில்லை. இந்த விருதை அனைவருக்கும் சமா்ப்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.