அதிமுகவின் 2-ஆம் கட்ட உள்கட்சித் தோ்தல் டிசம்பா் 22, 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் 45 மாவட்டங்களுக்கு 2-ஆம் கட்டமாக டிசம்பா் 22, 23-ஆம் தேதிகளில் உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு கழகங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கட்சியினா் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.