சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தன்னாா்வலா்கள் மூலமாக சனி, ஞாயிற்றக்கிழமை (டிச.18, 19) 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் சுமாா் 150 இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.18, 19) இசை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தப்பணியில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞா்கள் பங்கேற்றுள்ளனா்.