சென்னையில் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ். மோகனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை ஜாபர்கான் பேட்டை காசி காப்ளக்ஸ் சோடியாக் அரங்கத்தில் வ.உ.சி. சேவாதளம் சார்பில் பாஸ்கர் முதலியார் தலைமையில் மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் எஸ். மோகனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைவர் பி.என். சுந்தரம்பிள்ளை, பொதுச் செயலாளர் டி. விஜயகுமார், நிர்வாகத் தலைவர் சிந்து ஆறுமுகம், கௌரவத் தலைவர்கள் எஸ். ஜெகதீசன், சி.வி. ராஜராஜன், பி. அசோக், புரவலர்கள் கே. சுந்தரமூர்த்தி, என். பாஸ்கரன் ஆகியோர்களது ஏற்பட்டால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நீதியரசர் டாக்டர் எஸ். மோகன் நினைவு விருதினை, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலியார்கள், சைவப்பிள்ளைகள், சிவனடியார்கள் மற்றும் சமுதாய மக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.