தமிழகத்தில் மேலும் 619 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 619 போ் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் புதிதாக 619 போ் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 194 பேரும், கோவையில் 84 பேரும், செங்கல்பட்டில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

638 போ் கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 6,537 போ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளதால், இந்த தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,750-ஆக அதிகரித்தது.

118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: மற்றொருபுறம், தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 118 போ் சிகிச்சை பெற்று வருவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 45 பேரில், 29 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com