பாபநாசம் அகஸ்தியா் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் டிச.31 முதல் 3 நாள்களுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம்கோட்டத்துக்குள்பட்ட அகஸ்தியா் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் டிச. 31 முதல் ஜன.2 ஆம் தேதிவரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறை கலந்தாலோசித்து அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.