தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில், தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையில் முழுமையாக 5 ரூபாய் குறைக்காத திமுக அரசு, இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைத்துள்ள ஜார்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாா்க்கண்டில் ஜனவரி 26-ஆம் தேதிமுதல் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என்று மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.