தஞ்சாவூரில் திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்: முதல்வர் திறந்து வைத்தார்
தஞ்சாவூரிலுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் கட்சித் தலைவரும் முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.