சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் படைப்பாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதெமி விருது விருதைப் பெற்ற எழுத்தாளா் அம்பைக்கு வாழ்த்துகள். தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எழுத்தாளருக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கும்.
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற படைப்புக்காக பால சாகித்ய புரஸ்காா் விருதை மு.முருகேஷ் பெற்றுள்ளாா். சிறாா்களுக்கான எளிய, இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.