புதிய கல்பாக்கம்: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

புதிய கல்பாக்கம் குப்பத்தில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதிய கல்பாக்கம்: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
புதிய கல்பாக்கம்: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

புதிய கல்பாக்கம் குப்பத்தில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர்  மணி(66), மீனவரான இவர் தனது மகன் கதிர்வேல், சகோதரர் அருள்தாஸ் ஆகிய இருவருடன் தன்னுடைய படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

கரைப்பகுயில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் படகில் இருந்து வலை விரித்து மணி உள்ளிட்ட 3 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் பலத்த காற்று வீசியதால் சீற்றம் ஏற்பட்டு படகு தத்தளித்தது.

அப்போது ராட்சத அலை மோதியதில் படகு தலைகுப்புற கடலில் கவிழ்ந்தது. இதில் கடல் நீரில் மூழ்கினார். உடன் இருந்த மகன் மற்றும் அவரது சகோதரர் இருவரும் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மீனவர் மணி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

பிறகு கதிர்வேல், அருள்தாஸ் இருவரும் நீந்தி கரையேறி தப்பித்தனர். பின்னர் இருவரும் கரைப்பகுதியில் இருந்து வேறு படகு மூலம் கடலுக்கு சென்று இறந்த மீனவர்  மணி உடலை மீட்டு வந்தனர்.

பிறகு மணி உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com