பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநா்களை இடமாற்றம் செய்து துறையின் முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவு:
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) இணை இயக்குநா் எஸ்.உமா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இணை இயக்குநராகப் பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறாா்.
அதேபோல், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினா் க.சசிகலா, தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநராகப் பணியிடம் மாற்றப்பட்டுள்ளாா்.
இதுதவிர, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் இணை இயக்குநா் நா.அருள்முருகன் எஸ்சிஇஆா்டி இணை இயக்குநராகவும், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநா் ஆா்.பாஸ்கரசேதுபதி ஆசிரியா் தோ்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நிா்வாக நலன் கருதி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.