அதிமுகவை உடைக்க கேபி முனுசாமி காரணமாகப் போகிறார்: ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில்  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொது மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதிமுகவை உடைக்க கேபி முனுசாமி காரணமாகப் போகிறார்: ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில்  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொது மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், சில மனுதாரர்களை தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.

அப்போது, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியது: 

இங்கு பொதுமக்கள் பட்டா வேண்டும் என்றும், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு வேண்டும் என பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினீர்கள். உங்கள் கோரிக்கைகள் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தீர்க்கப்படாத இந்தக் கோரிக்கைகள் 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும். அவ்வாறு தீர்க்கப்படவில்லை என்றால் நீங்கள் என்னிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.616 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை நான் பெருமையாக நினைவு கூறுகிறேன். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் உடல்நிலை பிரச்னைகளை போக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தினோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த மாவட்டத்தில் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் பணி இழந்த மக்கள் நலப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  மீண்டும் பணி வழங்குவோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும் கேபி முனுசாமி எம்பி அமைச்சர் போர்வையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவரது பதவிகள் பறிக்கப்பட்டன. மீண்டும் அவருக்குப் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதிமுகவை உடைக்க கேபி முனுசாமி காரணமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது அவர்களுடைய கட்சி விவகாரம்.

1976-ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டேன். அத்தகைய பிப்ரவரி 1ஆம் தேதி, இங்கு நான் உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். 45 ஆண்டுகளுக்கு முன்பு  பிப்ரவரி 1ஆம் தேதி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நான் மற்றும் மிசாவை எதிர்த்தவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளானோம். விசா தழும்புகள் இன்னும் என் கையில் உள்ளன.

நீங்கள் அளித்துள்ள மனுக்கள் என் முதுகில் ஏற்றப்பட்ட பாரம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள்களில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நாம் இங்குக் கூடியுள்ளோம் என பேசினார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் டி. செங்குட்டுவன், ஒய். பிரகாஷ், பி. முருகன், சத்யா, திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன்.பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com