பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், ரூ. 7,700 ஆக இருந்த ஊதியம் ரூ. 10 ஆயிரமாக உயர்கிறது. இந்த ஊதிய உயர்வின்மூலம் 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் பயனடைவார்கள்.
பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஊதிய உயர்வு கோரி வந்த நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.