மதுரை மாநகராட்சி நிர்வாகம் கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா? ஸ்டாலின் கேள்வி

மதுரை மாநகராட்சி  நிர்வாகம் கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மதுரை மாநகராட்சி  நிர்வாகம் கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மதுரை மேலமாசி வீதியில் பழைமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம் அடைந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அந்த இருவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் ஏற்கனவே தீபாவளியன்று நடந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவர் கட்டடம் இடிந்து விழுந்து மரணமடைந்தும் - அ.தி.மு.க. அரசு  அலட்சியம் காட்டியதன் விளைவுதான் இப்போது மற்றுமொரு பழமையான கட்டடம் இடிந்து விழுந்து இருக்கிறது.

மதுரை மாநகராட்சி  நிர்வாகம் கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா? பழமையான கட்டடங்கள்  குறித்தும், அங்கு வசிப்போரின் பாதுகாப்பு பற்றியும்  மாநகராட்சி ஆணையரும்,  மாவட்ட ஆட்சித் தலைவரும் கவனம் செலுத்த மாட்டார்களா?

கடைசி நிமிடக் கையெழுத்துப் போட்டு கமிஷனடிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, எளிய மக்களின் உயிர்கள் பலியாவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். இனியேனும் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதுடன், மதுரையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடையும் வழங்க முதலமைச்சர் திரு. பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com