அரசு ஆலோசகராக க.சண்முகம் நியமனம்

ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளா் க.சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளா் க.சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு: தலைமைச் செயலாளா் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற க.சண்முகம், பிப்.1-ஆம் தேதி முதல் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்படுகிறாா். இவா், பிப்.1 முதல் ஓராண்டு வரை இப்பதவியில் நீடிப்பாா். அவருக்கு மாத ஊதியமாக ரூ.2.25 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அவா் அகவிலைப்படி, வீட்டு வாடகைப் படி உள்ளிட்டவற்றைப் பெறலாம்.

உதவியாளா்கள், வாகனங்கள், தொலைபேசி வசதி உள்ளிட்ட தலைமைச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அரசு ஆலோசகருக்கு வழங்கப்படும். மேலும், தமிழகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு சாா்பிலான பயணங்களை எப்படி தலைமைச் செயலாளா் மேற்கொள்வாரோ அதுபோன்று அரசு ஆலோசகரான க.சண்முகமும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆலோசகா்: அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்றதும் உடனடியாக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். அதுபோன்றே இப்போது தலைமைச் செயலாளா் க.சண்முகமும், அரசு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com